May 26, 2026
Thisaigal NewsYouTube
கயிற்றில் தொங்கிய ஆடவரை மீட்புப்படையினர் காப்பாற்றினர்
தற்போதைய செய்திகள்

கயிற்றில் தொங்கிய ஆடவரை மீட்புப்படையினர் காப்பாற்றினர்

Share:

டுங்குன், டிச. 21-


மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றின் துரப்பண மேடையில் இரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த தொழிலாளி ஒருவர் மீது இரும்புத்துண்டு விழுந்து, தோள்பட்டையில் செருகிக்கொண்டு பெருங்காயத்துடன் அந்தரங்கத்தில் தொங்கிய நிலையில் பெரும் துயரத்திற்கு ஆளானார்.

அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல், பாதுகாப்புப் பட்டையின் உதவியுடன் அந்தரங்கத்தில் தொங்கிய அந்த தொழிலாளியை, தீயணைப்பு, மீட்புப்படையினர் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பாதுகாப்பாக மீட்டனர்.

இச்சம்பவம் திரெங்கானு, டுங்குன் , பக்கா தொழிற்பேட்டையில் நேற்று மாலை 4.45 மணியளவில் நிகழ்ந்தது.

சுமார் 84 மீட்டர் உயரத்தில் பாதுகாப்பு பட்டையின் உதவியுடன் தொங்கிக்கொண்டு இருந்த அந்த தொழிலாளி, தோள்பட்டையில் ஏற்பட்ட ஆழமான காயம் ஏற்பட்டிருந்தாக பக்கா தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் ரிசுவான் ரம்லி தெரிவித்தார்.

ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்ட அந்த தொழிலாளியை துரப்பண மேடையிலிருந்து கீழே இறக்கும்பணி மாலை 6.30 மணியளவில் நிறைவுற்றது. பின்னர் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முகமட் ரிசுவான் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு