Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சரஸ்வதி பூஜை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது மனம் நிறைகின்றது
தற்போதைய செய்திகள்

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது மனம் நிறைகின்றது

Share:

கெடா ,அக்டோபர் 10-

நவராத்திரி விழாவையொட்டி முப்பெரும்தேவிகளில் ஒருவரான கலைமகள், சரஸ்வதி தேவியின் உன்னத நாளான சரஸ்வதி பூஜையையொட்டி இன்று கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது மனம் நிறைவை தருகிறது என்பதுடன் பெரிய வரமாக தாங்கள் கருதுவதாக பிரபல முத்தையாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வாசுதேவன் தம்பதியர் பெருமிதம் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜையை லங்காவி உட்பட கெடாவிலும், பெர்லிஸிலும் உள்ள 59 தமிழ்ப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு சுவையான சைவ உணவை வழங்கி வருகின்றனர் கெடா சுங்கைப்பட்டாணியில் அமைந்துள்ள முத்தையாஸ் நிறுவனம்.

இவ்வருடத்துடன் 24 ஆவது ஆண்டாக இந்த உன்னதப் பங்களிப்பை முத்தையாஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இது தங்கள் நிறுவனத்தின் சமூகவியல் கடப்பாடுகளில் ஒன்றாகும் என்கிறார் வாசுதேவன் .

இந்தாண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ,பாலர் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 12 ஆயிரம் பேருக்கு முத்தையாஸ் நிறுவனம் சார்பில்
மதிய உணவு வழங்கப்பட்டதாக வாசுதேவன் குறிப்பிட்டார்.

கடந்த 80 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முத்தையாஸ் நிறுவனத்தின் தோற்றுநரான தமது தந்தை மற்றும் சகோதரனின் கனவே சரஸ்வதி பூஜையன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டமாகும் என்று வாசுதேவன் விவரித்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான முத்தையாஸ் நிறுவனத்தின் இந்த உன்னதப்பணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Caption
திரு. வாசுதேவன்,
உரிமையாளர், முத்தையாஸ் நிறுவனம்

Caption

செய்தி & படம் : ஹேமா எம்.எஸ். மணியம்

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு