Jul 2, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவு அதிகாரியின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரிங்கிட் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

குடிநுழைவு அதிகாரியின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரிங்கிட் கண்டுபிடிப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.15-

வேலை தேடி மலேசியாவிற்கு வரும் அந்நிய நாட்டவர்களிடம் எவ்வித சோதனையும் நடத்தாமல் செட்டிங் முகப்பிடங்கள் மூலம் நாட்டிற்குள் நுழைய அனுமதித்தது மூலம் பெரியளவில் லஞ்சம் பெற்று வந்த குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதில், ஒருவரின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் மட்டும் 15 லட்சம் ரிங்கிட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செட்டிங் முகப்பிடங்களின் வாயிலாக அந்நிய நாட்டவர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்த குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் ஒருவர் மட்டும், தபுங் ஹஜி நிதியகத்தில் 10 லட்சம் ரிங்கிட் சேமிப்பைக் கெண்டுள்ளார்.

10 லட்சம் ரிங்கிட் உட்பட இதர தொகைகள் அனைத்தும் அந்த அதிகாரி, தனது மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் வங்கிச் சேமிப்பாகக் கணக்கு வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்