புக்கிட் மெர்தாஜாம், அம்பாங் ஜாஜாரில் திடக்கழிவுப்பொருட்கள் அகற்றும் தளத்தில் கையெறி குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திடக்கழிவுப்பொருட்களை அகற்றும் பணியாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கையெறி குண்டு என்று சந்தேகிக்கப்படும் ஒரு இரும்புப்பொருள் அவ்விடத்தில் மீட்கப்பட்டதாக செபெராங் பெராய் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் சான் தெரிவித்துள்ளார்.
துருப்பிடித்திருந்த அந்த வெடிக்குண்டு, செயலாக்கத் தன்மையை கொண்டது என்பது பரிசோதனையிலால் தெரியவந்துள்ளது. அந்த குண்டை செயலிழக்கச் செய்ய பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு அழிப்பு பிரிவின் உதவி நாடப்பட்டதாக தான் செங் சான் மேலும் கூறினார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து


