புக்கிட் மெர்தாஜாம், அம்பாங் ஜாஜாரில் திடக்கழிவுப்பொருட்கள் அகற்றும் தளத்தில் கையெறி குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திடக்கழிவுப்பொருட்களை அகற்றும் பணியாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கையெறி குண்டு என்று சந்தேகிக்கப்படும் ஒரு இரும்புப்பொருள் அவ்விடத்தில் மீட்கப்பட்டதாக செபெராங் பெராய் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் சான் தெரிவித்துள்ளார்.
துருப்பிடித்திருந்த அந்த வெடிக்குண்டு, செயலாக்கத் தன்மையை கொண்டது என்பது பரிசோதனையிலால் தெரியவந்துள்ளது. அந்த குண்டை செயலிழக்கச் செய்ய பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு அழிப்பு பிரிவின் உதவி நாடப்பட்டதாக தான் செங் சான் மேலும் கூறினார்.

Related News

தேசிய ஒற்றுமையின் சின்னங்களாக Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்கள்: அமைச்சகம் பரிசீலனை

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்


