Jan 24, 2026
Thisaigal NewsYouTube
விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.24-

கடந்த 2025-ஆம் ஆண்டு, சோதனைச் சாவடிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பணியமர்த்தப்பட்டிருந்த 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது முறையற்ற ஒப்புதல்கள் மற்றும் முத்திரையிடுதல் தொடர்பான குற்றங்களுக்காக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய மீறல்களானது எதிர்காலத்தில் தேசிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு பெரும் அபாயங்களை ஏற்படுத்தும் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்காக முறையற்ற முறையில் முத்திரையிடும் பழக்கமானது, நடைமுறைச் சட்டங்களின் கடுமையான விதிமீறல்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நுழைவிடங்களில், குறிப்பாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள சுங்க இலாகா, தனிமைப்படுத்தும் இடம் மற்றும் பாதுகாப்புச் சோதனை வளாகங்களில், கடமைகளை மீறும் அதிகாரிகள் மீது எந்த சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

செயல்பாட்டுத் தரநிலைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்வதற்காக, திடீர் சோதனைகள் மற்றும் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு