Mar 13, 2026
Thisaigal NewsYouTube
விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.24-

கடந்த 2025-ஆம் ஆண்டு, சோதனைச் சாவடிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பணியமர்த்தப்பட்டிருந்த 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது முறையற்ற ஒப்புதல்கள் மற்றும் முத்திரையிடுதல் தொடர்பான குற்றங்களுக்காக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய மீறல்களானது எதிர்காலத்தில் தேசிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு பெரும் அபாயங்களை ஏற்படுத்தும் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்காக முறையற்ற முறையில் முத்திரையிடும் பழக்கமானது, நடைமுறைச் சட்டங்களின் கடுமையான விதிமீறல்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நுழைவிடங்களில், குறிப்பாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள சுங்க இலாகா, தனிமைப்படுத்தும் இடம் மற்றும் பாதுகாப்புச் சோதனை வளாகங்களில், கடமைகளை மீறும் அதிகாரிகள் மீது எந்த சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

செயல்பாட்டுத் தரநிலைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்வதற்காக, திடீர் சோதனைகள் மற்றும் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!