Jan 24, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
தற்போதைய செய்திகள்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.24-

பினாங்கு மற்றும் கெடா மாநிலம் சுங்கைப் பட்டாணிக்கு இன்று ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், குவார் கெபா தொல்லியல் அருங்காட்சியகத்தின் திறப்பு விழா உட்பட பல அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பிறை நகரில் உள்ள புதிய செபராங் ஜெயா மருத்துவமனைக் கட்டிடத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் அன்வார், அதனைத் தொடர்ந்து, மடானி கலாச்சார திருவிழா மற்றும் பெர்மாத்தாங் பாவோ பகுதியில் நடைபெறும் கெண்டூரி ரக்யாட் பெனாங் 2026 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

செபராங் பிறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடியிருப்பாளர்களுக்கான சுகாதார சேவைகளின் திறனை மேம்படுத்துவதையும், அதன் தரத்தை உயர்த்துவதற்காகவும் இந்த புதிய மருத்துவமனையானது திறக்கப்படுகின்றது.

அதே வேளையில் இன்று மதியம், செபராங் ஜெயா மாநகராட்சி கோபுர வளாகத்தில் நடைபெறும் Seberang Perai Aspire மையம் மற்றும் Santuni Komuniti திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிலும் அன்வார் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இதனையடுத்து, அன்வார் திறந்து வைக்கவுள்ள குவார் கெபா தொல்லியல் அருங்காட்சியகமானது பினாங்கு அரசாங்கத்தின் முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகின்றது.

இந்த அருங்காட்சியகமானது, தீபகற்ப மலேசியாவின் வடக்கு பிராந்தியத்தின் தொல்லியல் சுற்றுலா வரைபடத்திற்குப் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு