Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
தற்போதைய செய்திகள்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.24-

பினாங்கு மற்றும் கெடா மாநிலம் சுங்கைப் பட்டாணிக்கு இன்று ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், குவார் கெபா தொல்லியல் அருங்காட்சியகத்தின் திறப்பு விழா உட்பட பல அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பிறை நகரில் உள்ள புதிய செபராங் ஜெயா மருத்துவமனைக் கட்டிடத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் அன்வார், அதனைத் தொடர்ந்து, மடானி கலாச்சார திருவிழா மற்றும் பெர்மாத்தாங் பாவோ பகுதியில் நடைபெறும் கெண்டூரி ரக்யாட் பெனாங் 2026 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

செபராங் பிறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடியிருப்பாளர்களுக்கான சுகாதார சேவைகளின் திறனை மேம்படுத்துவதையும், அதன் தரத்தை உயர்த்துவதற்காகவும் இந்த புதிய மருத்துவமனையானது திறக்கப்படுகின்றது.

அதே வேளையில் இன்று மதியம், செபராங் ஜெயா மாநகராட்சி கோபுர வளாகத்தில் நடைபெறும் Seberang Perai Aspire மையம் மற்றும் Santuni Komuniti திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிலும் அன்வார் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இதனையடுத்து, அன்வார் திறந்து வைக்கவுள்ள குவார் கெபா தொல்லியல் அருங்காட்சியகமானது பினாங்கு அரசாங்கத்தின் முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகின்றது.

இந்த அருங்காட்சியகமானது, தீபகற்ப மலேசியாவின் வடக்கு பிராந்தியத்தின் தொல்லியல் சுற்றுலா வரைபடத்திற்குப் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்க... | Thisaigal News