May 26, 2026
Thisaigal NewsYouTube
டத்தோ ராமச்சந்திரனின் விண்ணப்பம் : டிசம்பர் 9 ஆம் தேதி விசாரணை
தற்போதைய செய்திகள்

டத்தோ ராமச்சந்திரனின் விண்ணப்பம் : டிசம்பர் 9 ஆம் தேதி விசாரணை

Share:

பினாங்கு,டிச.6-


பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்குச் சொந்தமான எட்டு லட்சம் வெள்ளி செலவிலான தங்க ரதம் விவகாரம் தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்க ரத கொள்முதலில் ஊழல் புரிந்துள்ளதாக கூறப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டத்தோ எம். ராமச்சந்திரனின் தடுப்புக்காவல் நாட்களை குறைப்பதற்கு அவரின் வழக்கறிஞர் செய்து கொண்டுள்ள விண்ணப்பம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

அதாவது, இராமச்சந்திரனை தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட 6 நாள் தடுப்புக்காவலில் ஐந்தாவது நாள்தான், பினாங்கு உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஆர். ரோஷுன் ராஜ் தெரிவித்தார்.

டிசம்பர் 9 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு இந்த தடுப்புக்காவல் மீதான விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ராமச்சந்திரனின் தடுப்புக்காவலை 6 நாட்களிலிருந்து குறைப்பதற்குதான் நாங்கள், மாஜிஸ்திரேட் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனுவை சார்வு செய்தோம். ஆனால், 6 நாள் தடுப்புக்காவலில் 5 ஆவது நாள்தான் விசாரணை நடத்த முடியும் என்று உயர் நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.

இம்முடிவு தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என்று வழக்கறிஞர் ரோஷுன் ராஜ் தெரிவித்துள்ளார்.

காரணம், டத்தோ இராமச்சந்திரனின் உடல் நிலையை கருத்தில் கொண்டுதான் தாங்கள் இந்த விண்ணப்பதை சார்வு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு