Jan 18, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!

Share:

புத்ராஜெயா, ஜனவரி.18-

நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஒற்றுமை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான முறையில் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முந்தைய சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் வருகையை மட்டும் பதிவு செய்யாமல், கடமை உணர்வுடன் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த அமர்வில், மக்கள் நிகராளிகள் தங்களுக்குள் உறவை வலுப்படுத்திக் கொள்வதோடு, மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் ஒருமித்த கருத்துடன் செயல்படவும் விவாதிக்கப்பட்டதாக ஒற்றுமை அரசங்கத்தின் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

இம்முறை நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துதல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட நான்கு முக்கியமான சட்டப் பரிந்துரையைத் தாக்கல் செய்ய அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் உரையுடன் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் இந்த 15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர், மொத்தம் 20 நாட்கள் நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி 20 முதல் மாமன்னரின் உரை மீதான விவாதங்கள் ஏழு நாட்களுக்கு நடைபெறும் வேளையில், பிப்ரவரி மாத இறுதியில் அமைச்சர்களின் பதில்களும் பிற அரசு விவகாரங்களும் கையாளப்படும்.

Related News

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!