கிள்ளான், பண்டாமாரான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காரை ஓட்டிச் சென்ற 31 வயது நபர், காவற்படையினரின் உத்தரவை மீறி சுமார் 10 கிலோமீட்டர் தூரம் தப்பியோடிய நிலையில், ரோந்து வாகனத்தை மோதிய பின்னர் பிடிபட்டார். பிடிபட்ட அந்த நபரிடம் நடத்திய சோதனையில் அவரிடமிருந்து மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர் ஏற்கனவே பல குற்றப் பின்னணிகளைக் கொண்டவர் என்பதும், காவற்படையால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்த தாக கிள்ளான் செலாத்தான் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் லிம் ஜித் ஹுய் தெரிவித்தார். தப்பியோடும் முயற்சியில் மேலும் இரு பொதுமக்களின் வாகனங்களையும் சேதப்படுத்திய அந்த நபரை, காவற்படையினர் மார்ச் 16-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் எடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related News

பெக்கான் நானாஸ்: கடும் சூறாவளியால் 28 வீடுகள் சேதம்; பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பாரம்பரியக் கலாச்சாரமே மலாக்காவின் பலம்; தெருவோர டிஸ்கோக்கள் தேவையில்லை: டாக்டர் அக்மல் சாலே காட்டம்

மதுபோதை ஓட்டுநரின் காரால் மோதப்பட்டு தம்பதியர் உயிரிழப்பு

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 4 இளைஞர்கள் கைது; 271 அபராதங்கள் விதிப்பு

மலேசியாவில் வெப்ப அலையினால் 56 பேர் பாதிப்பு; இருவர் பலி


