கிள்ளான், பண்டாமாரான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காரை ஓட்டிச் சென்ற 31 வயது நபர், காவற்படையினரின் உத்தரவை மீறி சுமார் 10 கிலோமீட்டர் தூரம் தப்பியோடிய நிலையில், ரோந்து வாகனத்தை மோதிய பின்னர் பிடிபட்டார். பிடிபட்ட அந்த நபரிடம் நடத்திய சோதனையில் அவரிடமிருந்து மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர் ஏற்கனவே பல குற்றப் பின்னணிகளைக் கொண்டவர் என்பதும், காவற்படையால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்த தாக கிள்ளான் செலாத்தான் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் லிம் ஜித் ஹுய் தெரிவித்தார். தப்பியோடும் முயற்சியில் மேலும் இரு பொதுமக்களின் வாகனங்களையும் சேதப்படுத்திய அந்த நபரை, காவற்படையினர் மார்ச் 16-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் எடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்


