May 1, 2026
Thisaigal NewsYouTube
தாய், தங்கையை காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்
தற்போதைய செய்திகள்

தாய், தங்கையை காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்

Share:

தனது தாயாரையும், தங்கையையும் கத்தியால் குத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர் ஒருவர், தனக்கு எதிரான அவ்விரு குற்றச் சாட்டுகளையும் இன்று மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
24 வயதுடைய முகமது ஹிடாயத் அபு சமாட் என்ற ஆடவர், 49 வயதுடைய தனது தாயாரான சபியா அப்துல் காதரையும், 11 வயதுடைய சகோதரி நூர் இமாம் டானியா அபு சமாட்டையும், இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்காக குற்றஞ் சாட்டப்பட்டார்.

இவர் இக்குற்றத்தைக் கடந்த மார்ச் 10 ஆம் தேதி, தாமான் புக்கிட் லோரோங் இண்டா என்ற குடியிருப்புப் பகுதியில், இரவு 10 மணியளவில் புரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி