May 28, 2026
Thisaigal NewsYouTube
19 வயது இளைஞருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

19 வயது இளைஞருக்கு 6 நாள் தடுப்புக் காவல்

Share:

சுங்கை பட்டாணி, மார்ச்.18-

கெடா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவி ஒருவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய இளைஞர் ஒருவர், விசாரணைக்கு ஏதுவாக 6 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது.

நேற்று காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கடுங் காயங்களுக்கு ஆளான அந்த மாணவி தற்போது சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அந்த மாணவியுடன் கத்தி முனையில் போராடிய 19 வயதுடைய அந்த இளைஞரும் காயமுற்றார். அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலையில் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்ட மாஜிஸ்திரேட் எம். கலையரசி, தீவிர சிகிச்சைப் பெற்று வரும் அந்த இளைஞரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு அனுமதி அளித்தார்.

சம்பந்தப்பட்ட இளைஞர் அந்த மாணவியின் முன்னாள் காதலன் என்று நம்பப்படுகிறது. தன்னுடனான காதல் தொடர்பை அந்த மாணவி முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்