Aug 10, 2026
Thisaigal NewsYouTube
19 வயது இளைஞருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

19 வயது இளைஞருக்கு 6 நாள் தடுப்புக் காவல்

Share:

சுங்கை பட்டாணி, மார்ச்.18-

கெடா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவி ஒருவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய இளைஞர் ஒருவர், விசாரணைக்கு ஏதுவாக 6 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது.

நேற்று காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கடுங் காயங்களுக்கு ஆளான அந்த மாணவி தற்போது சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அந்த மாணவியுடன் கத்தி முனையில் போராடிய 19 வயதுடைய அந்த இளைஞரும் காயமுற்றார். அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலையில் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்ட மாஜிஸ்திரேட் எம். கலையரசி, தீவிர சிகிச்சைப் பெற்று வரும் அந்த இளைஞரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு அனுமதி அளித்தார்.

சம்பந்தப்பட்ட இளைஞர் அந்த மாணவியின் முன்னாள் காதலன் என்று நம்பப்படுகிறது. தன்னுடனான காதல் தொடர்பை அந்த மாணவி முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து