Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பின் வீட்டுக் காவல் அரசாணை உத்தரவை அன்வார் அமல்படுத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

நஜீப்பின் வீட்டுக் காவல் அரசாணை உத்தரவை அன்வார் அமல்படுத்த வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.18-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு முன்னாள் மாமன்னர் பிறப்பித்துள்ள ஒரு கூடுதல் அரசாணை உத்தரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அம்னோவின் 160 தொகுதிகளின் தலைவர்கள் ஒரு சேர வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி நாட்டின் 16 ஆவது மாமன்னரான சுல்தான் அப்துல்லா பிறப்பித்துள்ள கூடுதல் அரசாணை உத்தரவை அமல்படுத்துவதற்கு பிரதமர் என்ற முறையில் அன்வார் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

முன்னாள் மாமன்னரின் அரசாணை உத்தரவை அமல்படுத்துவதில் அன்வார் இனியும் சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டு இருக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நேற்று இரவு 8 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள முன்னணி ஹோட்டலில் திரண்ட நாடு முழுவதும் உள்ள 160 அம்னோ டிவிஷன் தலைவர்கள், பிரதமரிடம் இந்த வேண்டுகோளை விடுத்தனர்.

நஜீப் தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான ஒரு கூடுதலான அரசாணை உத்தரவு உள்ளது என்ற கடந்த ஜுலை 9 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த முதிர் நிலை வழக்கறிஞர் ஒருவர், கூட்டரசு நீதிமன்ற விசாரணையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அம்னோ தலைவர்கள், பிரதமர் அன்வாரிடம் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

நஜீப்பின் வீட்டுக் காவல் அரசாணை உத்தரவை அன்வார் அமல்படுத்... | Thisaigal News