Mar 25, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பின் வீட்டுக் காவல் அரசாணை உத்தரவை அன்வார் அமல்படுத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

நஜீப்பின் வீட்டுக் காவல் அரசாணை உத்தரவை அன்வார் அமல்படுத்த வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.18-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு முன்னாள் மாமன்னர் பிறப்பித்துள்ள ஒரு கூடுதல் அரசாணை உத்தரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அம்னோவின் 160 தொகுதிகளின் தலைவர்கள் ஒரு சேர வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி நாட்டின் 16 ஆவது மாமன்னரான சுல்தான் அப்துல்லா பிறப்பித்துள்ள கூடுதல் அரசாணை உத்தரவை அமல்படுத்துவதற்கு பிரதமர் என்ற முறையில் அன்வார் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

முன்னாள் மாமன்னரின் அரசாணை உத்தரவை அமல்படுத்துவதில் அன்வார் இனியும் சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டு இருக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நேற்று இரவு 8 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள முன்னணி ஹோட்டலில் திரண்ட நாடு முழுவதும் உள்ள 160 அம்னோ டிவிஷன் தலைவர்கள், பிரதமரிடம் இந்த வேண்டுகோளை விடுத்தனர்.

நஜீப் தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான ஒரு கூடுதலான அரசாணை உத்தரவு உள்ளது என்ற கடந்த ஜுலை 9 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த முதிர் நிலை வழக்கறிஞர் ஒருவர், கூட்டரசு நீதிமன்ற விசாரணையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அம்னோ தலைவர்கள், பிரதமர் அன்வாரிடம் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது