கோலாலம்பூர், பிப்ரவரி.13-
டேசா பாஹ்லாவான் பகுதியில் உள்ள மூன்று மாடி சொகுசு பங்களா ஒன்றில் குடிநுழைவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்டு வந்த விபச்சார செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
நேற்று வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையின் போது, 21 முதல் 43 வயது வரையிலான 40 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விபச்சார கும்பலின் மூளையாக, செயல்பட்டதாக நம்பப்படும் சீன நாட்டவரும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை துணை தலைமை இயக்குநர் டத்தோ லொக்மான் எஃபெண்டி ரம்லி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சுற்றுலா விசாவைக் கொண்டிருந்ததோடு, மேலும் சிலர் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் இது போன்ற சம்பவங்களை முறியடிக்க தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் லொக்மான் தெரிவித்துள்ளார்.








