Feb 14, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த ஆடவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

முன்னாள் காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த ஆடவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது

Share:

கோத்தா கினபாலு, பிப்ரவரி.14-

தனது முன்னாள் காதலியைக் கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்த குற்றத்திற்காக 33 வயது ஆடவருக்கு கோத்தா கினபாலு உயர்நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு, மே மாதம், கோத்தா கினபாலுவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், 21 வயதான Nurul Ain Silien-ஐ, Haider Daniel Chung Abdullah என்ற அந்த ஆடவர் கத்தியால் வெறி கொண்டு குத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அப்பெண்ணை அவர், திட்டமிட்டே கொலை செய்துள்ளார் என்றும், தாக்குதலுக்கு முந்தைய நாள் கத்தியை வாங்கியுள்ளதாகவும் நீதிபதி Alexander Siew தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பக்கவாட்டில் தொடர்ச்சியாக பல முறையும், பின் பகுதியில் குறைந்தது எட்டு முறைக்கு மேலும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதை நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், Chung தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related News

ஆயுதப்படை கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக நீக்கப்படும்: டத்தோ மாலிக் ரஸாக் சுலைமான் அறிவிப்பு

ஆயுதப்படை கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக நீக்கப்படும்: டத்தோ மாலிக் ரஸாக் சுலைமான் அறிவிப்பு

கெப்போங் தம்பதி மரணம்: பெண்ணின் உடலில் 89 கத்திக் குத்துக் காயங்கள் இருப்பது உறுதி

கெப்போங் தம்பதி மரணம்: பெண்ணின் உடலில் 89 கத்திக் குத்துக் காயங்கள் இருப்பது உறுதி

அவதூறான செய்தி தொடர்பாக ப்ளூம்பெர்க் நிறுவனத்தை விசாரிக்கிறது புக்கிட் அமான்

அவதூறான செய்தி தொடர்பாக ப்ளூம்பெர்க் நிறுவனத்தை விசாரிக்கிறது புக்கிட் அமான்

அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகள்: சிறப்புக்குழு முதலில் விசாரிக்கட்டும் - பிரதமர் அன்வார்

அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகள்: சிறப்புக்குழு முதலில் விசாரிக்கட்டும் - பிரதமர் அன்வார்

இனவாதக் கருத்துக்களைப் பரப்பும் 50-க்கும் மேற்பட்ட கணக்குகள் அடையாளம்: அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் எச்சரிக்கை

இனவாதக் கருத்துக்களைப் பரப்பும் 50-க்கும் மேற்பட்ட கணக்குகள் அடையாளம்: அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் எச்சரிக்கை

செந்தூலில்  வீடற்ற பெண் கொலை: கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிப்பு என போலீஸ் உறுதி

செந்தூலில் வீடற்ற பெண் கொலை: கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிப்பு என போலீஸ் உறுதி

முன்னாள் காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த ஆடவருக்கு தூக்கு... | Thisaigal News