Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பகடி வதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்
தற்போதைய செய்திகள்

பகடி வதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.16-

நாடெங்கிலும் பகடி வதைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகப் பதிவாகியுள்ள பள்ளிகளில், முதற்கட்டமாக சிசிடிவி-க்கள் நிறுவப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி, எதிர்கால பகடி வதைச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், மேற்கொள்ளப்படும் இந்த பாதுகாப்பு முயற்சிக்காக அரசு மொத்தம் 3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது.

இதன் அடிப்படையில், நாடு முழுவதும் 200 விடுதிகளில் CCTV அமைக்கும் பணிகள் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி தொடங்குகின்றன.

இத்திட்டம் வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான பகடி வதை சம்பவங்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளன என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News