தொழிலாளர் தினமான நேற்று கோலாலம்பூர் மாநகரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மக்களின் எழுச்சி எனும் பெயரில் இரண்டு ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு தொடர்பாக போலீசார் இரண்டு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்.
மாநகரின் மையப்பகுதியில் மாஜு ஜங்சன் கட்டடத்திலிருந்து தொடங்கி, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் வாயிலாக லெபோ அம்பாங் வரையில் ஓர் ஊர்வலமும், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சோகோ பேரங்காடியின் முன்புறமும் ஓர் உர்வலமும் நடத்தப்பட்டது தொடர்பில் இந்த விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. நோர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.
மாஜூ ஜங்சன் ஊர்வலத்தில் சுமார் 200 பேர் பங்கு கொண்டுள்ள வேளையில் சோகோ பேரங்காடி முன்புறம் நடந்த ஊர்வலத்தில் சுமார் 30 பேர் பங்கு கொண்டுள்ளதாக நூர் டெல்ஹான் குறிப்பிட்டார். இந்த இரண்டு ஊர்வலங்களையும் ஏற்பாடு செய்தவர்கள், விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


