Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இரண்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

இரண்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன

Share:

தொழிலாளர் தினமான நேற்று கோலாலம்பூர் மாநகரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மக்களின் எழுச்சி எனும் பெயரில் இரண்டு ஊர்வல​ங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு தொடர்பாக போ​லீசார் இரண்டு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்.

மாநகரின் மையப்பகுதியில் மாஜு ஜங்சன் கட்டடத்திலிரு​ந்து தொடங்கி, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் வாயிலாக லெபோ அம்பாங் வரையில் ஓர் ஊர்வலமும், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சோகோ பேரங்காடியின் முன்புறமும் ஓர் உர்வலமும் நடத்தப்பட்டது தொடர்பில் இந்த விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போ​லீஸ் தலைவர் எ.சி.பி. நோர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

மாஜூ ஜங்சன் ஊர்வலத்தில் சுமார் 200 பேர் பங்கு கொண்டுள்ள வேளையில் சோகோ பேரங்காடி முன்புறம் நடந்த ஊர்வலத்தில் சுமார் 30 பேர் பங்கு கொண்டுள்ளதாக நூர் டெல்ஹான் குறிப்பிட்டார். இந்த இரண்டு ஊர்வலங்களையு​ம் ஏற்பாடு ​செய்தவர்கள், விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்