பினாங்கு மாநிலத்தில் கைவிடப்பட்ட அடுக்கங்கள் மற்றும் நடுத்தர அடுக்கு மாடி வீடுகள் தொழிலாளர்களுக்கான தங்கு விடுதிகளாக மாற்றப்படும் என்று பினாங்கு மாநில வீடமைப்பு,சுற்றுச்சூழல் ஆட்சிக்கு உறுப்பினர் டத்தோஸ்ரீ எஸ். சுந்தரராஜு தெரிவித்தார்.
குறிப்பாக, செபராங் பிறையில் உள்ள விற்கப்படாத மலிவு விலை அடுக்குமாடி வீடுகள் அந்நியத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வீடுகளாக மாற்றப்படும்.
செபராங் பிறை வட்டாரத்தில் உள்ள பல தொழிற்சாலை நிர்வாகங்கள் அடுக்குமாடி வீடுகளை தங்களிடம் வேலை செய்கின்ற அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகளாக மாற்றி வருகின்றன. இது உண்மையிலேயே ஒரு நல்ல முயற்சி என்று சுந்தரராஜு தெரிவித்தார்.








