கோலாலம்பூர், ஜூலை 09-
டிக் டாக்கில் ஆபாச வார்த்தைகள், அச்சுறுத்தல்கள் போன்ற இணையப் பகடிவதைக்கு ஆளாகி உயிரை மாய்ந்துக்கொண்ட ஈஷா என்ற ராஜேஸ்வரியைப் போன்ற பகடிவதை குற்றவாளிகள், இரண்டு நிருபர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக புகார் கிடைத்து இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்துள்ளார்.
பகடிவதை குற்றவாளிகளுடன் தொடர்படுத்தப்பட்ட ஈஷாவின் மரணத்திற்கு பின்னர் தாங்களும் இது போன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதாக அந்த இரு நிருபர்களும் தம்முடன் தொடர்பு கொண்டு புகார் அளித்து இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஈஷாவிற்கு பயன்படுத்தப்பட்ட டிக் டாக் போலி கணக்குகளைப் போல சம்பந்தப்பட்ட பகடிவதை குற்றவாளிகள், நிருபர்கள் விவகாரத்திலும் போலி கணக்கை பயன்படுத்தியுள்ளனர்.
பகடிவதை செய்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை கைப்பற்றி, அவற்றை பயன்படுத்தி எந்த அளவிற்கு அவதூறு விளைக்க முடியுமா? அந்த அளவிற்கு அச்சுறுத்தலை அந்த கும்பல் மேற்கொண்டு வருவதாக Fahmi Fadzil தெரிவித்தார்.
டிக் டாக்கில் இது போன்ற போலி கணக்குகள் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு சட்டத்துறை அமைச்சர் அஸலினா ஓஸ்மான் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் ஆகியோருடன் நாளை புதன்கிழமை ஒரு சந்திப்பை தாம் நடத்தவிருப்பதாக பாமி பட்சில் குறிப்பிட்டார்.








