Mar 24, 2026
Thisaigal NewsYouTube
ஈஷா பகடிவதை செய்யப்பட்டதைப் போன்று இரண்டு நிருபர்களுக்கு அச்சுறுத்தல்
தற்போதைய செய்திகள்

ஈஷா பகடிவதை செய்யப்பட்டதைப் போன்று இரண்டு நிருபர்களுக்கு அச்சுறுத்தல்

Share:

கோலாலம்பூர், ஜூலை 09-

டிக் டாக்கில் ஆபாச வார்த்தைகள், அச்சுறுத்தல்கள் போன்ற இணையப் பகடிவதைக்கு ஆளாகி உயிரை மாய்ந்துக்கொண்ட ஈஷா என்ற ராஜேஸ்வரியைப் போன்ற பகடிவதை குற்றவாளிகள், இரண்டு நிருபர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக புகார் கிடைத்து இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்துள்ளார்.

பகடிவதை குற்றவாளிகளுடன் தொடர்படுத்தப்பட்ட ஈஷாவின் மரணத்திற்கு பின்னர் தாங்களும் இது போன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதாக அந்த இரு நிருபர்களும் தம்முடன் தொடர்பு கொண்டு புகார் அளித்து இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஈஷாவிற்கு பயன்படுத்தப்பட்ட டிக் டாக் போலி கணக்குகளைப் போல சம்பந்தப்பட்ட பகடிவதை குற்றவாளிகள், நிருபர்கள் விவகாரத்திலும் போலி கணக்கை பயன்படுத்தியுள்ளனர்.

பகடிவதை செய்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை கைப்பற்றி, அவற்றை பயன்படுத்தி எந்த அளவிற்கு அவதூறு விளைக்க முடியுமா? அந்த அளவிற்கு அச்சுறுத்தலை அந்த கும்பல் மேற்கொண்டு வருவதாக Fahmi Fadzil தெரிவித்தார்.

டிக் டாக்கில் இது போன்ற போலி கணக்குகள் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு சட்டத்துறை அமைச்சர் அஸலினா ஓஸ்மான் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் ஆகியோருடன் நாளை புதன்கிழமை ஒரு சந்திப்பை தாம் நடத்தவிருப்பதாக பாமி பட்சில் குறிப்பிட்டார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு