Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வாடகைக்கு மாற்றுப் பூக்கடைகளைக் கட்டித் தர தேவஸ்தானம் தயார் ! - தான் ஶ்ரீ ஆர் நடராஜா தகவல்
தற்போதைய செய்திகள்

வாடகைக்கு மாற்றுப் பூக்கடைகளைக் கட்டித் தர தேவஸ்தானம் தயார் ! - தான் ஶ்ரீ ஆர் நடராஜா தகவல்

Share:

அண்மையில், பத்துமலைத் திருத்தலத்தின் வெளியே செயல்பட்டு வந்த பூக்கடைக்கள் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையில், அதற்கு மாற்றாக வேறு பூக்கடைகளைக் கட்டித் தர கோலாம்பூர் மகா மாரியமன் திருக்கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஶ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பின்படி, அந்த நிலம் பத்துமலை நிர்வாகத்திற்கே திரும்பத் தரப்பட வேண்டும். எனவே, எடுக்கப்பட்ட நிலத்தை, நிலமாகவே கொடுக்க செலாயாங் நகராண்மைக் கழகம் அந்தப் பூக்கடைகளை இடித்தது. கடந்த ஆகஸ்டு மாதமே அந்தக் கடை வியாபாரிகளுக்கு நோட்டீ௶ கொடுக்கப்பட்டதாகக் கூறும் தான் ஶ்ரீ நடராஜ, தீபாபளி வரை வியாபாரம் செய்யவும் அனுமதித்ததாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார்..

அங்கு செயல்பட்டு வரும் பூக்கடைகளுக்கும் தமது நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும்கூட, மாற்று கடைகள் கட்டித் தரத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் தங்கள் விருப்பத்திற்கு யாரும் சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவிக்கவோ அல்லது தவறானத் தகவல்களைப் பரப்பு மக்களைக் குழப்ப வேண்டாம் எனவும் தான் ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!