Jun 15, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் குற்றச்செயல்களுக்குத் துணை போகாதீர்! போலீஸ்காரர்களுக்கு அயோக் கான் நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்செயல்களுக்குத் துணை போகாதீர்! போலீஸ்காரர்களுக்கு அயோக் கான் நினைவுறுத்து

Share:

போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் குற்றச்செயல்களுக்குத் துணை போக வேண்டாம் என்று அரச மலேசிய போலீஸ் படையின் அதிகாரிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைதீன் பிச்சை நினைவுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் அனைத்து மாநிலங்களின் போலீஸ் தலைவர்களுடன் இன்று இயங்கலை வழி நடத்திய சந்திப்பில் அரச மலேசிய போலீஸ் படையின் நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் கட்டொழுங்கு ஆகியவற்றை கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தை அயோப் கான் வலியுறுத்தினார்.

இம்மாதம் 16 ஆம் தேதி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மிக உயரிய பொறுப்பான குற்றப்புலனாய்வுத்துறையின் சி.ஐ.டி. இயக்குநர் பதவியையேற்கவிருக்கும் அயோப் கான், போலீஸ் படையின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவிற்கு தலைமையேற்றுள்ள மாநிலத் தலைவர்களுக்கு வழங்கிய இறுதி நல்லுரையில் போலீஸ் படையின் நம்பகத்தன்மையை வலியுறுத்தி பேசினார்.

நாட்டை செல்லரித்துக்கொண்டு இருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய குற்றச்செயல்களை முற்றாக துடைத் தொழிப்பதில் போலீஸ் படையினர் நேர்மையுடன் பணியாற்றி, தங்கள் கடற்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று அயோப் கான் வலியுறுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்