Mar 14, 2026
Thisaigal NewsYouTube
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் காலமானார்
தற்போதைய செய்திகள்

நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் காலமானார்

Share:

தமிழ்த்திரையுலக நடிகரும். தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் இன்று டிசம்பர் 28 ஆ ம் தேதி வியாழக்கிழமை) காலையில் காலமானார். அவருக்கு வயது 71. உடல் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த விஜயகாந்த் இன்று காலையில் இறுதி மூச்சை விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை. மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….

அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் காலையில் உயிரிழந்தார்.

விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் வண்டியின் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.. சென்னையில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்த் வீட்டின் முன்பு தொண்டர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்..

மறைந்த நடிகர் விஜயகாந்த், தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகை கட்டியாண்ட பெருமைக்குரியவர் ஆவார். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர் என்று மக்கள் வர்ணித்துள்ளனர்.

தன்னலமற்ற தலைவரான விஜயகாந்த் தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர் என்று அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
தமிழ் திரையுலகில் கேப்டன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த். 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆவார். 1979 இல் வெளியான அகல் விளக்கு தமிழ்ப்படம் மூலம் நடிகர் விஜயகாந்த் தமிழ் திரையுலகில் அ றிமுகமானாார். இவரின் நூறாவது வெற்றிப்படம் கேப்டன் பிரகாரன் திரைப்படமாகும்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து