Mar 15, 2026
Thisaigal NewsYouTube
வீட்டிற்குத் தீ வைத்து நாசவேலை புரிந்த நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

வீட்டிற்குத் தீ வைத்து நாசவேலை புரிந்த நபர் தேடப்படுகிறார்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.09-

கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி ஜோகூர் பாரு, தாமான் யுனிவெர்சிட்டியில் உள்ள ஒரு வீடமைப்புப் பகுதியில் வீடொன்றுக்குத் தீயிட்டு, நாச வேலை புரிந்தததாக நம்பப்படும் நபர் ஒருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வீட்டின் உரிமையாளரான 58 வயது நபர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி தற்போது தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸ்ரோல் அனுவார் நோர் தெரிவித்தார்.

அந்த வீட்டிற்கு அதிகாலை 4.18 மணியளவில் தீயிடப்பட்டுள்ளதாக புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் வீட்டின் கீழ் மாடியின் ஒரு பகுதி முற்றாக அழிந்ததாக வீட்டின் உரிமையாளர் புகார் அளித்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த நாச வேலையைப் புரிந்த நபர், ஒரு குறிப்பையும் கைவிட்டுச் சென்றுள்ளார். தனது மகனின் கடன் தொடர்பாக எழுந்த தகராற்றின் காரணமாக தனது வீட்டைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று வீட்டு உரிமையாளர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக சுப்ரிண்டெண்டன் அஸ்ரோல் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்