ஜோகூர் பாரு, மார்ச்.15-
மேற்காசியாவில் நீடிக்கும் மோதலால் விமானப் போக்குவரத்திலும் எரிபொருள் விநியோகத்திலும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்க நாளை தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம் கூடுகிறது. பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், உலகளாவிய எண்ணெய் விநியோகத் தடையால் உள்நாட்டுத் தொழில்துறைக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசீர் தெரிவித்தார். குறிப்பாக, Hormuz நீரிணை வழித்தடத்தில் ஏற்படும் பாதிப்புகள் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியைச் சீர்குலைத்து, நாட்டின் பணவீக்க விகிதத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் விளக்கினார்.








