May 4, 2026
Thisaigal NewsYouTube
கோலா சாங்லாங்: 500 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான மின்-சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கோலா சாங்லாங்: 500 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான மின்-சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

Share:

கங்கார், மார்ச்.08-

பெர்லிஸ், கோலா சாங்லாங் மீன்பிடி வாரியத் துறைமுகத்தில் அண்டை நாட்டிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 500 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 16 ஆயிரத்து 500 மின்-சிகரெட் கருவிகளை மலேசிய கடல்சார் அமலாக்க முகமையினரான Maritim Malaysia பறிமுதல் செய்தனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட சோதனையில், இக்கருவிகளை ஏற்றி வந்த லாரியுடன் 19 முதல் 47 வயதுடைய மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டதாக அதன் கெடா - பெர்லிஸ் மண்டல் இயக்குநர் ரோம்லி முஸ்தஃபா தெரிவித்தார். முறையாக அறிவிக்கப்படாமல் படகுகள் மூலம் கடல் வழியாகக் கடத்த முயன்ற இந்த விவகாரம் குறித்து சுங்கச் சட்டம் 1967-இன் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related News