Jan 23, 2026
Thisaigal NewsYouTube
ஸ்பெயினிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 டன் பன்றி இறைச்சி பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஸ்பெயினிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 டன் பன்றி இறைச்சி பறிமுதல்

Share:

ஷா ஆலாம், ஜனவரி.23-

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டிலிருந்து சுமார் 50 டன் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியை மலேசியாவிற்கு கடத்தி வருவதற்கான முயற்சியை அதிகாரிகள் முறியடித்தனர்.

அத்தகைய பொருட்களை மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள 14 நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும்.

கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, Port Klang-ல் உள்ள West Port-இல், இரண்டு கொள்கலன்களை ஆய்வு செய்த எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் அதிகாரிகள், சுமார் 6 லட்சத்து 60 ஆயிரத்து 137 ரிங்கிட் மதிப்புள்ள பன்றி இறைச்சியைக் கண்டறிந்தனர்.

அந்த இரண்டு கொள்கலன்களையும், அதிகாரிகள் ஆவணப்படுத்த முயன்ற போது, சந்தேகத்திற்குரிய வகையில் அவை இருந்ததாக ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் ஷுஹைலி ஸையின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பன்றி இறைச்சியின் விற்பனை அதிகம் என்பதால், இத்தகைய கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் ஷுஹைலி ஸையின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த பன்றி இறைச்சியை இறக்குமதி செய்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது