மூவார், டிச.2-
15 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஜோகூர், பாகோவில் உள்ள அரசாங்க பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றும் டெக்னிஷன் ஒருவர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
22 வயது கையில் இர்ஸ்யாட் கைருடின் என்ற அந்த டெக்னிஷன் நீதிபதி சயனி முகமட் நூர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு 9 மணியளவில் மூவார் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் காருக்குள் இக்குற்றத்தை புரிந்ததாக அந்த டெக்னிஷன் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.








