ஆ௧ஸ்ட் 03-
மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு நிதி வரவுகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் மத்தியில் கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சிறந்த அடைவு நிலையை பதிவு செய்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பதிவான ரிங்கிட்டின் மதிப்பு, டாலருக்கு எதிராக 1.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் சிறந்த அடைவு நிலையை தொடர்ந்து 10 ஆவது நாளாக நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டு கால இழப்புகளுக்கு பிறகு ஆசிய நாடுகளை விட மிக சிறந்த அடைவு நிலையை ரிங்கிட் பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு 112 மில்லியன் அமெரிக்க டாலரை அல்லது 505.61 மில்லியன் மலேசிய ரிங்கிட்டை உள்ளூர் பங்குகளில் செலுத்திய உலகளாவிய நிதிகளின் வட்டியைத் திரும்ப பெற இது உதவியுள்ளது.
குறிப்பாக, தென்கிழக்காசிய நாடான மலேசியாவின் பொருளாதாரம் மீட்சி பெறத் தொடங்கியுள்ளது. இரண்டாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அனைத்து மதிப்பீடுகளையும் முறியடித்து, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








