Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்தில் சிக்கிய நபரிடம் போதைப்பொருள்

Share:

தங்கா பத்து, ஜன.30-

மலாக்கா, தங்கா பத்து, பாயா லுபோவில் பாலர் பள்ளி ஒன்றின் வேலியை மோதித்தள்ளிய நபர், போதைப்பொருள் கொண்டு சென்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று மலாக்கா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டோபர் பாதிட் தெரிவித்தார்.

நேற்று இரவு 11.39 மணியளவில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் அழைப்பைப் பெற்றனர். காரில் சிக்கிக் கொண்ட அந்த நபர், மீட்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டார். அப்போது 56 வயதுடைய அந்த நபர், போதைப்பொருள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக ஏசிபி கிரிஸ்டோபர் குறிப்பிட்டார்.

தனது ஜீன்ஸ் காற்சட்டையில் 15.46 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி கிரிஸ்டோபர் மேலும் கூறினார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்