Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்தில் சிக்கிய நபரிடம் போதைப்பொருள்

Share:

தங்கா பத்து, ஜன.30-

மலாக்கா, தங்கா பத்து, பாயா லுபோவில் பாலர் பள்ளி ஒன்றின் வேலியை மோதித்தள்ளிய நபர், போதைப்பொருள் கொண்டு சென்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று மலாக்கா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டோபர் பாதிட் தெரிவித்தார்.

நேற்று இரவு 11.39 மணியளவில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் அழைப்பைப் பெற்றனர். காரில் சிக்கிக் கொண்ட அந்த நபர், மீட்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டார். அப்போது 56 வயதுடைய அந்த நபர், போதைப்பொருள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக ஏசிபி கிரிஸ்டோபர் குறிப்பிட்டார்.

தனது ஜீன்ஸ் காற்சட்டையில் 15.46 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி கிரிஸ்டோபர் மேலும் கூறினார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை