May 24, 2026
Thisaigal NewsYouTube
மோனோரயில் தண்டவாளத்தில் குதித்த ஆடவரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

மோனோரயில் தண்டவாளத்தில் குதித்த ஆடவரை போலீஸ் தேடுகிறது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 27-

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், மோனோரல் நிலையத்தின் இருப்புப்பாதையில் ( இரும்புப்பாதை அல்ல ) குதித்து, அத்துமீறி அடுத்த மருங்கிற்கு கடந்த சென்ற ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த செப்டபம்ர் 25 ஆம் தேதி இரவு 11.35 மணியளவில் சமூக வலைத்தளங்களில் வைரலான 4 விநாடிகள் ஓட வல்ல காணொளியைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மே அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

புக்கிட் பிந்தாங் மோனோரல் ரயில் நிலையத்தில் இருப்புப்பாதையில் ஆடவர் கடந்து செல்லும் காட்சி என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததாக சுலிஸ்மே அஃபெண்டி குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக நேற்று இரவு 9.34 மணியளவில் PRASARANA நிறுவனத்தின் உதவி போலீசாரிடமிருந்து ஒரு புகார் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News