அரசு மருத்துவமனைகளில் தற்போது பணியாற்றி வரும் 12 ஆயிரத்து 700 ஒப்பந்த மருத்துவர்கள், அடுத்த 3 ஆண்டுகளில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
இவ்வாண்டில், கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 300 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும், இதற்காக அரசாங்கம் 1,700 கோடி வெள்ளியை செலவிடவேண்டி வரும் என்று நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் மக்களவையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாக்கப்பட்ட போதிலும், ஒப்பந்தக் கால மருத்துவர்களை நியமிக்கும் நடைமுறை தொடரும் என்று பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
அதே வேளையில், ஒப்பந்த மருத்துவர்கள் விடுத்துள்ள இதர கோரிக்கைகள் அனைத்தும் கட்டங்கட்டமாக தீர்க்கப்படும் என்று அன்வார் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


