Aug 11, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏவில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏவில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்

Share:

சிப்பாங், ஏப்ரல்.18-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடிதம் மற்றும் பொருள் பட்டுவாடா மையத்தில் 36.091 கிலோ எடையிலான கஞ்சா கடத்தல் முயற்சியை மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக முறிடியத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையில் 35 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மலேசிய சுங்கத் துறையின் மத்தியப் பிரதேசத்திற்கான இடைக்கால உதவி தலைமை இயக்குநர் டாக்டர் அஹ்மாட் தௌவிஃக் சுலைமான் தெரிவித்தார்.

இவ்வகை போதைப் பொருளை, ஐரோப்பாவிற்குக் கடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சரக்கு விமானத்தில் கடிதம் மற்றும் பட்டுவாடாப் பொருட்களை ஏற்றுவதற்கு முன்னதாக, பார்சல் பொருட்களின் தோற்றத்தை உள்ளீடு செய்யும் கணினித் திரையில் சோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமாக தெரிந்த சில பெட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

பின்னர் அந்தப் பெட்டிகள் ஒதுக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்ட போது அவற்றில் சிறு சிறு பொட்டலங்களில், பெரியளவில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தவிர, அந்தப் பெட்டிகளின் முகவரியும், முறையாக இல்லாதது தெரியவந்தது. அந்த பெட்டிகள் யாருக்குச் சொந்தம், யாருக்கு சேர்ப்பிக்கப்படவிருந்தது முதலிய விவரங்கள் ஆராயப்பட்டு வருவதாக டாக்டர் அஹ்மாட் தௌவிஃக் தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி