Jun 4, 2026
Thisaigal NewsYouTube
ஏர்ஏசியா விமானங்கள் தரையிறக்கம் என்ற செய்தி முற்றிலும் வதந்தி: நிறுவனம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

ஏர்ஏசியா விமானங்கள் தரையிறக்கம் என்ற செய்தி முற்றிலும் வதந்தி: நிறுவனம் விளக்கம்

Share:

பிலிப்பைன்ஸ் ஏர்ஏசியா நிறுவனத்தின் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை என்றும், ஆரோக்கியமான போட்டியை சீர்குலைக்க திட்டமிட்டு நடத்தப்படும் அவதூறு பிரச்சாரம் இது என்றும் ஏர்ஏசியா குழுமம் மறுத்துள்ளது.

வானிலை போன்ற வழக்கமான காரணிகளைத் தவிர, பிலிப்பைன்ஸ் ஏர்ஏசியாவின் அனைத்து விமானச் சேவைகளும் வழக்கம் போல் முழுமையாக இயங்கி வருகின்றன என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. 2021 முதல் 2026 மே வரையிலான காலப்பகுதிக்கான கட்டண நிலுவைத் தொகையான 271 மில்லியன் பேசோஸைச் செலுத்தாததால், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களில் பிலிப்பைன்ஸ் ஏர்ஏசியா தனது செயல்பாடுகளை நிறுத்துமாறு பிலிப்பைன்ஸ் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டதாகக் கூறப்படும் நிலையிலும், தங்களின் விமானச் சேவைகள் திட்டமிட்டபடி தொடரும் என்று ஏர்ஏசியா பயணிகளுக்கு உறுதியளித்துள்ளது.

இதுபோன்ற தவறான செய்திகள் பயணிட்டாளர்கள்யே இறுதியில் பாதிக்கும் என்று ஏர்ஏசியா குழுமத்தின் இணை நிறுவனர் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

Related News