புட்பாண்டா மலேசியா மற்றும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு இடையிலான நீண்டகால வியூகக் கூட்டணியின் கீழ் நாடு முழுவதும் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இராக்கான் மூடா உறுப்பினர்களுக்கு பிரத்யேக 'பாண்டாப்ரோ' சந்தா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்ஃபிக் ஜொஹாரி முன்னிலையில் இந்தத் திட்டம் இன்று புத்ராஜெயாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
இதன் மூலம், பதிவுசெய்த உறுப்பினர்கள் தங்களின் தினசரி உணவு மற்றும் மளிகைப் பொருட்களுக்கான தேவைகளைச் சிக்கனமாகப் பெற முடியும். குறிப்பாக, 12 மாத கால பாண்டாப்ரோ சந்தா திட்டத்திற்கு 30 விழுக்காடு பிரத்யேக தள்ளுபடி வழங்கப்படுவதோடு, வரம்பற்ற இலவச விநியோகம் மற்றும் கூடுதல் தள்ளுபடிகளையும் அவர்கள் பெறலாம் என்று இளைஞர்த, விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்ஃபிக் விளக்கினார்.
தற்போதைய உறுப்பினர்களுக்கான விவரங்கள் 3 வாரங்களுக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். புதியவர்கள் dbbelia.gov.my இணையதளத்தில் பதிவு செய்து, 2 முதல் 3 வாரங்களில் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.











