Jul 4, 2026
Thisaigal NewsYouTube
விமான நிலையத்தில் முகப்பிடங்களில் செட்டிங் முறை, அமலாக்க அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

விமான நிலையத்தில் முகப்பிடங்களில் செட்டிங் முறை, அமலாக்க அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்

Share:

சிப்பாங், ஜூலை.24-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடத்தில் செட்டிங் முறையில் ஓர் அமலாக்க அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார் என்பது சிசிடிவி கேமராவில் கண்டுபிடிக்கப்பட்டது.

செட்டிங் முறை அமைக்கப்பட்ட முகப்பிடத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.20 மணியளவில் அந்த அமலாக்க அதிகாரி சந்தேகத்திற்கு இடமாகச் செயல்பட்டது ரகசிய கேமராவின் மூலம் தெரிய வந்தது.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சியைச் சேர்ந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரியை மடக்கிச் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 8 ஆயிரத்து 391 ரிங்கிட் 45 காசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் மூன்று தொடர்புத்துறை சாதனங்களும், கடப்பிதழ்களின் எண் வரிசை பதிவையும் அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடப்பிதழ்களின் ஆகக் கடைசி நான்கு எண்களை அவர் பதிவு செய்து வைத்திருந்தது, சம்பந்தப்பட்ட நபர்களை சட்டவிரோதமாக வெளியேற்றுவதற்கு அவர் திட்டமிட்டு இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த அதிகாரி, எல்லைப் பாதுகாப்பு, கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது