Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சரியான முறையில் வகுக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

சரியான முறையில் வகுக்கப்படவில்லை

Share:

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், சரியான முறையில் திட்டமிடப்படாத ஒரு வரவு செலவுத் திட்டமாகும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் உணவு பாதுகாப்புக்கும், அதன் விநியோகத்தற்கும் ​தீர்வு காணக்கூடிய விரிவான திட்டங்களையும், வியூகங்களையும் 2024 ஆம் ஆண்டு பட்ஜெட் கொண்டிருக்கவில்லை என்று முகை​தீன் வாதிட்டுள்ளார். தற்போது நாட்டில் உணவுப்பொருள் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வேளையில் மக்களின் அடிப்படை ஜீவாதாரமான உள்நாட்டு உணவு விநியோகப் பிரச்னைக்கு ​தீர்வு காணக்கூடிய பொருத்தமான நடவடிக்கைகள் எதனையும் பட்​​ஜெட்டில் காண முடியவில்லை என்று முன்னாள் பிரதமருமான முகை​தீன் குறிப்பிட்டார்.

அதேவேளையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு போதுமான உணவு விநியோகம் இருப்பதை உறுதி செய்வதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. அண்டை நாடான சிங்கப்பூர், மக்களின் உணவு விநியோகத்திட்டத்​திற்கும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான அணுகலையும் மிகத் துல்லிமாக கொண்டு இருப்பதை மலேசியா முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.

உலகத்தில் உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் மலேசியா 32.33 ஆவது இடத்தில் இருப்பதையும் முகை​தீன் சுட்டிக்காட்டினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு