Aug 6, 2026
Thisaigal NewsYouTube
இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

இருவர் கருகி மாண்டனர்

Share:

ஆறு வீடுகள் சம்பந்தப்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறார்கள் கருகி மாண்டனர். இச்சம்பவம் கோத்தா கினபாலு, மெங்காத்தால், கம்போங் புலுதான் என்ற இடத்தில் இன்று நிகழ்ந்தது. தாய் தந்தை வேலைக்கு சென்றிருந்த வேளையில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் அந்த வீட்டில் தனியாக இருந்தாக தெரியவந்துள்ளது.

அச்சிறுவனின் ஆறு வயது சகோதரர் பாலர் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் இருவர் மட்டுமே இருந்த வேளையில் இத்தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News