குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்ட போதிலும், குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் நிலை ஏற்படுமானால் அது மக்களுக்கு எந்த வகையிலும் சுமையில்லாத அளவிலேயே இருக்கும் என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மீதான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
சில மாநிலங்களில் ஒரு நீண்ட காலமாகவே குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் அடிப்படை தேவையாக குடிநீரும், மின்சார விநியோகமும் இருந்து வருகிறது. எனவே அதன் கட்டணங்களை உயர்த்தும் யோசனை முன்வைக்கும் போது மக்களின் நலன் சார்ந்த அம்சங்களை முதலில் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று அமைச்சர் நிக் நஸ்மி விளக்கினார்.








