Mar 20, 2026
Thisaigal NewsYouTube
புடி 95 திட்டத்தில் ரோன் 95 பெட்ரோலை வாங்க முடியாமல், சில ஏமாற்றங்கள்
தற்போதைய செய்திகள்

புடி 95 திட்டத்தில் ரோன் 95 பெட்ரோலை வாங்க முடியாமல், சில ஏமாற்றங்கள்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

புடி 95 சலுகை விலையில் ரோன் 95 பெட்ரோல் திட்டம் இன்று நாடு முழுவதும் சுமூகமாக நடைபெற்று வரும் வேளையில் முதல் நாளிலேயே அவ்வகை பெட்ரோலை வாங்க முடியாமல் வாகனமோட்டிகள் ஏமாற்றம் அடைந்த சில சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு விலையில் ரோன் 95 பெட்ரோலை வாங்குவதற்கு மைகாட் அட்டை அவசியமாகும். மைகாட் அட்டையைப் பயன்படுத்தியே சலுகை விலையில் ரோன் 95 பெட்றோலைப் பெற முடியும்.

இந்நிலையில் மைகாட் அட்டையை உடன் கொண்டு வராதது, மென்பொருள் சேதமுற்ற மைகாட் அட்டை, காலாவதியான வாகனமோட்டும் லைசென்ஸ் முதலிய காரணங்களினால் சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகள் ரோன் 95 பெட்ரோலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

எனினும் ஒட்டுமொத்த நிலையில் இத்திட்டம் நாடு தழுவிய நிலையில் எவ்வித சிக்கலின்றி சுமூகமாக நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து