Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புடி 95 திட்டத்தில் ரோன் 95 பெட்ரோலை வாங்க முடியாமல், சில ஏமாற்றங்கள்
தற்போதைய செய்திகள்

புடி 95 திட்டத்தில் ரோன் 95 பெட்ரோலை வாங்க முடியாமல், சில ஏமாற்றங்கள்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

புடி 95 சலுகை விலையில் ரோன் 95 பெட்ரோல் திட்டம் இன்று நாடு முழுவதும் சுமூகமாக நடைபெற்று வரும் வேளையில் முதல் நாளிலேயே அவ்வகை பெட்ரோலை வாங்க முடியாமல் வாகனமோட்டிகள் ஏமாற்றம் அடைந்த சில சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு விலையில் ரோன் 95 பெட்ரோலை வாங்குவதற்கு மைகாட் அட்டை அவசியமாகும். மைகாட் அட்டையைப் பயன்படுத்தியே சலுகை விலையில் ரோன் 95 பெட்றோலைப் பெற முடியும்.

இந்நிலையில் மைகாட் அட்டையை உடன் கொண்டு வராதது, மென்பொருள் சேதமுற்ற மைகாட் அட்டை, காலாவதியான வாகனமோட்டும் லைசென்ஸ் முதலிய காரணங்களினால் சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகள் ரோன் 95 பெட்ரோலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

எனினும் ஒட்டுமொத்த நிலையில் இத்திட்டம் நாடு தழுவிய நிலையில் எவ்வித சிக்கலின்றி சுமூகமாக நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்