Mar 23, 2026
Thisaigal NewsYouTube
அந்த நபர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அந்த நபர் கைது செய்யப்பட்டார்

Share:

குளுவாங், ஜுலை 01-

ஜோகூர், குளுவாங்,தாமன் குளுவாங் பராட்- டில் ஒரு மளிகைக்கடை முன்புறம் மாற்றுத் திறனாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்திய 45 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் நிகழ்ந்தது என்று குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் கழுத்தில் கடும் காயத்திற்கு ஆளான 32 வயது மாற்றுத் திறனாளி, குளுவாங், என்செ பெசார் கல்சோம் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று ஏசிபி பஹ்ரின் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் தேடப்பட்டு வந்த சந்தேகப் பேர்வழி நேற்று மாலை 6.17 மணியளவில் தாமன் பெர்சத்து- வில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News