சுங்கை சிப்புட், ஜூலை.19-
பேராக் மாநிலம், சுங்கை சிப்புட் அருகே உள்ள கம்போங் ஓராங் அஸ்லி பெருக பகுதியில், கிராமத்துக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்ட முயன்ற ஒருவர் யானைத் தாக்குதலில் காயமடைந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில், நான்கு யானைகள் வீடுகளின் பின்புறம் புகுந்து மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழை பயிர்களைச் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யானைகளை விரட்ட முயன்ற போது அருகில் சென்ற அந்த நபரை யானை ஒன்று தாக்கியது.
இதில் காயமடைந்து மயங்கிய அவரை மீட்ட அப்பகுதி மக்கள், Raja Permaisuri Bainun மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








