பெட்டாலிங் ஜெயா, ஜூலை.19-
பெட்டாலிங் ஜெயாவில் 7 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகை கேட்டு கடத்தப்பட்ட நபரை, போலீசார் சிறப்பு நடவடிக்கை மூலம் 48 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டனர்.
இந்த நடவடிக்கையில் 30 முதல் 46 வயதுக்குட்பட்ட 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள், கைப்பேசிகள் மற்றும் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஷா ஆலாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டதாகவும், இந்த வழக்கு 1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் பிரிவு 3(1) -இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்துள்ளார்.








