Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவுடன் தனது வெற்றியை இந்தியா பகிர்ந்து கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

மலேசியாவுடன் தனது வெற்றியை இந்தியா பகிர்ந்து கொள்ள வேண்டும்

Share:

இலக்கவியல் துறையில் அபார சாதனைப்படைத்து வரும் இந்தியா, அந்த வெற்றியின் பலாபலன் மூலம், ஆசியான் உறுப்பு நாடுகளும் பயன்பெறும் பொருட்டு தனது தொழில்நுட்பத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தலைமையில் நடைபெற்ற 20 ஆவது ஆசியான் – இந்தியா மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் டத்தோஸ்ரீ அன்வார் இந்த பரிந்துரையை முன்வைத்தார்.

இந்தியாவின் அளப்பரிய சாதனை மற்றும் வெற்றியை ஆசியான் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்வது அதன் பலா பலனில் அனைவரும் நன்மை அடைய முடியும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News