Aug 7, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

Share:

சபா, கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தின் 3-ஆவது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதி நுழைவாயிலில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையிலும், பயணிகள் நடமாட்டம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று கோத்தா கினபாலு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சான் ஃபூங் ஹின் தெரிவித்துள்ளார்.

விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை துணை அமைச்சருமான டத்தோ சான், கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலு வந்தடைந்ததும் இச்சம்பவம் குறித்துத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். விபத்து நடந்த பகுதியை உடனடியாகச் சுத்தம் செய்து, பயணிகள் தடையின்றிச் செல்வதை விமான நிலைய நிர்வாகம் மிக விரைவாக உறுதி செய்தது.

இவ்விபத்தில் ஒரே ஒரு தானியங்கி கண்ணாடி கதவு மட்டுமே சேதமடைந்துள்ளது என்றும், மற்ற அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளும் முழுமையாகச் செயல்படுவதால் பயணிகள் வழக்கம் போல் தங்களது பயணத்தைத் தொடரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டான சூழலில் உடனடியாகச் செயலாற்றிய விமான நிலைய ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் அவர் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

2030-க்குள் பொருளாதாரத்தை மேம்படுத்த 'இரண்டாவது சிலாங்கூர் திட்டம்': மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சமர்ப்பிப்பு

2030-க்குள் பொருளாதாரத்தை மேம்படுத்த 'இரண்டாவது சிலாங்கூர் திட்டம்': மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சமர்ப்பிப்பு