Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி உடல், எல்ஆர்டி ரயில் இருப்புப் பாதையில் கண்டு பிடிக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், பிப்.22-

ஒரு மாற்றுத் திறனாளியான ஆடவர் ஒருவரின் உடல், இன்று காலையில் கோலாலம்பூர் தித்திவங்சா எல்ஆர்டி ரயில் நிலையத்தில் இருப்புப் பாதையில் கண்டு பிடிக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இன்று காலை 8.38 மணியளவில் MERS- 999 மூலமாக அவசர அழைப்பு பெறப்பட்டதாக கோலாலம்பூர் செயலாக்க நடவடிக்கை அறையின் தலைவர் ஃபாடில் ஹேசாம் முகமட் தெரிவித்தார்.

அந்த மாற்றுத் திறனாளி இறந்து விட்டதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அந்த மாற்றுத் திறனாளி, உடல் சமநிலையற்ற நிலையில் ரயில் இருப்புப் பாதையில் விழுந்து இருக்கலாம் என்றும் தானியங்கி முறையில் ரயிலை இயக்கும் மையத்தில் உள்ள ஆப்ரேட்டர் இதனை கவனிக்கத் தவறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

புலன் விசாரணைக்கு ஏதுவாக LRT PWTC, செந்தூல் மற்றும் செந்தூல் தீமோர் ஆகிய ரயில் நிலையங்களில் எல்ஆர்டி ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக எல்ஆர்டி ரயில் சேவையை வழிநடத்தும் ரபிட் ரேல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related News

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன