கோலாலம்பூர், மிட் வேலி சிட்டி பேரங்காடியில் உள்ள தெனாகா நேஷனல் பெர்காட் மின் துணை நிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்ததன் விளைவாக, நேற்று தற்காலிகமாக மூடப்பட்ட அப்போரங்காடி, இன்று காலை முதல் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை 10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அப்பேரங்காடியில் உள்ள திஎன்பி துணை மின் நிலையத்திலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறிய வேளையில், அது குறித்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 40 வீரர்களுடன் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றன.
அந்த திஎன்பி இன் துணை மின்நிலையத்தில் உள்ள கேபல் கூலிங் ஆய்ல் அதிக வெப்பமடைந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்


