கோலாலம்பூர், மிட் வேலி சிட்டி பேரங்காடியில் உள்ள தெனாகா நேஷனல் பெர்காட் மின் துணை நிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்ததன் விளைவாக, நேற்று தற்காலிகமாக மூடப்பட்ட அப்போரங்காடி, இன்று காலை முதல் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை 10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அப்பேரங்காடியில் உள்ள திஎன்பி துணை மின் நிலையத்திலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறிய வேளையில், அது குறித்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 40 வீரர்களுடன் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றன.
அந்த திஎன்பி இன் துணை மின்நிலையத்தில் உள்ள கேபல் கூலிங் ஆய்ல் அதிக வெப்பமடைந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்


