Jan 30, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாரு பள்ளி மோதல் - மூவர் மீது விசாரணை
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாரு பள்ளி மோதல் - மூவர் மீது விசாரணை

Share:

ஜோகூர் பாரு, ஜனவரி.30-

ஜோகூர் பாருவில் உள்ள பள்ளி ஒன்றின் முன்பாக 17 வயதுடைய இரு மாணவர்கள் மற்றும் 20 வயது இளைஞர் ஒருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை 13 வயது மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் தொல்லை காரணமாகவே இந்த மோதல் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் மோதலில் ஈடுபட்ட மாணவர் ஆகிய இருவரும் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளனர்.

காயத்தை ஏற்படுத்தியதற்காக ஒரு தரப்பின் மீதும், மாணவியின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக மற்றொரு தரப்பின் மீதும் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்த மோதல் தொடர்பான வீடியோக்களைப் பகிர வேண்டாம் என்று ஜோகூர் பாரு செலத்தான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமாட் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

சமூக வருகை அனுமதிச் சீட்டைத் தவறாகப் பயன்படுத்திய 55,000 வெளிநாட்டினர் மீது நடவடிக்கை

சமூக வருகை அனுமதிச் சீட்டைத் தவறாகப் பயன்படுத்திய 55,000 வெளிநாட்டினர் மீது நடவடிக்கை

பயணிகள் சேவைக்குத் தயாராகும் எல்ஆர்டி3: பிப்ரவரிக்குள் அனைத்து இரயில் சோதனைகளும் முடிக்க இலக்கு

பயணிகள் சேவைக்குத் தயாராகும் எல்ஆர்டி3: பிப்ரவரிக்குள் அனைத்து இரயில் சோதனைகளும் முடிக்க இலக்கு

தாய்லாந்து பெண்ணிடம் கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

தாய்லாந்து பெண்ணிடம் கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பத்து பஹாட்: காணாமல் போன பெண் சடலமாக மீட்பு; வீட்டில் இருந்தவர் கைது

பத்து பஹாட்: காணாமல் போன பெண் சடலமாக மீட்பு; வீட்டில் இருந்தவர் கைது

ஜமால் யூனுஸ் சொத்துக்கள் ஜப்தி: சட்ட விரோதமானது அல்ல என தெரசா கோக் வழக்கறிஞர் விளக்கம்

ஜமால் யூனுஸ் சொத்துக்கள் ஜப்தி: சட்ட விரோதமானது அல்ல என தெரசா கோக் வழக்கறிஞர் விளக்கம்

மசாஜ் நிலைய ஊழல்: அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கைது; 13.3 மில்லியன் ரிங்கிட் முடக்கம்

மசாஜ் நிலைய ஊழல்: அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கைது; 13.3 மில்லியன் ரிங்கிட் முடக்கம்