May 18, 2026
Thisaigal NewsYouTube
ஆயுதப்படையினர் அண்மைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயார் நிலையில் இருக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

ஆயுதப்படையினர் அண்மைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயார் நிலையில் இருக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், ஜூன்.28-

அதிகரித்து வரும் சவால் நிறைந்த மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய அரசியல் சூழலில், எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ள ஆயுதப் படையினர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். குறிப்பாக ஆகக் கடைசியான தொழில்நுட்பத் தளவாடங்களுக்கு ஏற்ப மலேசிய ஆயுதப் படையினர் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

ஈரான்-இஸ்ரேல் போரும், காஸாவில் நீடித்த மோதலும், அனைத்துலகச் சட்டங்கள், இனி உலகளாவிய அமைதியைப் பாதுகாக்கப் போதுமானதாக இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

"யார் நண்பர், யார் எதிரி என்று நமக்குத் தெரியாததால், எந்தவொரு சாத்தியத்தையும் சமாளிக்க மலேசிய ஆயுதப் படையினர், எப்போதும் தயாராகவும், அண்மைய தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் பெற்றவர்களாகவும் இருப்பது மிக முக்கியம் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

இன்று கோலாலம்பூர், சுங்கை பெசியில் உள்ள கேம் பெர்டானாவில் மலேசிய ஆயுதப்படையின் கேடட் அதிகாரிகளுக்குப் பதவியேற்புச் சடங்கிற்கான அணிவகுப்பை பார்வையிட்டப் பின்னர் நடைபெற்ற பதவி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வின் போது மாமன்னர் இதனைத் தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி