திரெங்கானு, செப்டம்பர் 08-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக புல் வெட்டுத் தொழிலாளி ஒருவருக்கு கோலத்திராங்கானு, செஷன்ஸ் நீதிமன்றம் , 42 ஆண்டு சிறையும், 30 பிரம்படித் தண்டனையும் இன்று விதித்தது .
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 39 வயதுடைய நபர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மாரங் -கில் உள்ள ஒரு வீட்டில் 12 வயது சிறுமியான தனது மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது .
நம்பிக்கையின் அடிப்படையில் தனது பராமரிப்பில் விடப்பட்ட அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்த அந்த நபரின் செயலை நீதிமன்றம் கடுமையாக கருதுவதாக நீதிபதி நோரிஹ் ஒஸ்மன் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.








