கிழக்கு கரையோர நெடுஞ்சாலையான எல்.பி.டி -1 இல் நேற்று இரவு 11 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
பகாங், லஞ்சாங் பகுதியில் இருந்து குவாந்தான் நோக்கிச் செல்லும் வழியில், 110ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இரவு 10.44 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.
விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களுக்குள் நான்கு பேர் சிக்கியிருந்தனர்.
ஆடவர் ஒருவரும், பெண் ஒருவரும் காரில் பயணம் செய்த வேளையில் மற்றொரு வாகனத்தில் சிறுவன் ஒருவனும் மற்றொரு நபரும் இருந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் போராடி அனைவரையும் வாகனங்களிலிருந்து மீட்டனர். ஆனால், நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆனால், சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் உறுதி செய்தனர்








