Sep 1, 2026
Thisaigal NewsYouTube
செதாபாக்கில் 22-ஆவது மாடியில் இருந்து விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

செதாபாக்கில் 22-ஆவது மாடியில் இருந்து விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Share:

கோலாலம்பூர் செதாபாக்-வில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 22-ஆவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கு விழுந்ததில் 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

ஜாலான் லங்காவி-யில் உள்ள ரெசிடென்சி தெராத்தாய் குடியிருப்பில் நேற்று காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காலை 8.50 மணியளவில் பாதுகாப்பு பணியாளர் போலீசாருக்கு தகவல் அளித்ததாக வாங்ஸ்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் அனாஸ் சுலைமான் தெரிவித்துள்ளார்.

சி.சி.டி.வி பதிவுகளின்படி, யுனிவர்சிட்டி ஜியோமெட்டிக்கா மலேசியா-வில் முதல் பருவம் பயிலும் மாணவர், பல்கலைக்கழகம் வழங்கிய குடியிருப்புக்கு காலை 7.07 மணியளவில் திரும்பியுள்ளார்.

பின்னர் 22-ஆவது மாடி நடைபாதையில் இருந்து கீழே விழுந்ததாக அனாஸ் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related News

எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி

எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி

புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு

புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு

பூடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு!

பூடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு!

மைகாட் அச்சிடும் சேவைகள் செப்டம்பர் 7 வரையில் தற்காலிக நிறுத்தம் / மேம்படுத்தப்பட்ட புதிய அட்டைக்குக் காத்திருக்குமாறு ஜேபிஎன் அறிவுறுத்து

மைகாட் அச்சிடும் சேவைகள் செப்டம்பர் 7 வரையில் தற்காலிக நிறுத்தம் / மேம்படுத்தப்பட்ட புதிய அட்டைக்குக் காத்திருக்குமாறு ஜேபிஎன் அறிவுறுத்து

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சம் வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்தத் திட்டம்

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சம் வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்தத் திட்டம்

கேபிள் திருடர்களின் கார் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு - 30 நிமிடங்கள் துரத்திச் சென்று பிடித்த போலீசார்

கேபிள் திருடர்களின் கார் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு - 30 நிமிடங்கள் துரத்திச் சென்று பிடித்த போலீசார்